என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Sunday, November 27, 2005

நினைவுகள்.

நண்பனே..

காலங்கள் உருண்டோடியது..
தன் இலைகளை அவிழ்த்துக்கொண்ட
மரங்களுக்கும் குளுரியது.

வேலைகள் கழுத்தை நெரித்தன..
இதற்கு இடைவெளியாய்..திருமணம்.
ஒரு தேவதையாய்..
அழகே உருவான ஒரு தங்கத்தாமரை..
என் உயிருக்குள்...

கவலைகள் மறந்தன..மலைகளும் சிறுகடுகானது.
சுமையான வேலைகள்..சுலபமானது..

ஆயிரம் இருந்தும்..
நண்பனே..
பட்டாம்பூச்சியாய்
நாம் இருந்த காலங்களை
அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

Monday, November 14, 2005

Case By Case

வழக்குகள் பல விதம்....ஒவ்வொன்றும் புதுவிதம்...

சமீப காலத்துல தங்கர்பச்சன் மேல case போட்டது ..அவர் தமிழ்பட நடிகைகளை தப்பா பேசினதுக்காக மன்னிப்பு கேட்டு.எல்லாரு முன்னாடியும் காலுல விழுந்து..... நல்ல வேளை காலுல விழுந்தத photo எடுத்து முதல் News a போடமா இருந்தாங்களே( ஒரு வேளை வேற paper ல போட்டு இருப்பானோ ?)...

அடுத்து தங்கர கால்ல விழ வச்ச "கோயில் புகழ் குஷ்பூ" வ, புரட்டி புரட்டி எடுத்துட்டாங்க....அவ தமிழ் பெண்களயே தப்பா பேசிட்ட்டா...குஷ்புவுக்கு எதிராக அங்க case, இங்க case னு இப்ப அவ மெல ஏகபட்ட case எல்லா ஊருலயும்...அத்தியாவசிய பிரச்சன்னைகள் ஆயிரம் இருக்கு அத விட்டுட்டு இந்த மக்களயும் குத்தம் சொல்லித்தான் ஆகணும்..

குஷ்புக்கு சிபாரிசு பண்ணி பேசினதுல இப்ப "சுகாசினி" யோட "கொடும்பாவி" ய எரிச்சு இருக்காங்க... இந்த news கொஞ்ச நாள் ஓடும்...

சரி இது எல்லாம் பரவாயில்லங்க.. "விஜய்காந்த்" - இலவச கல்யாணம் பண்ணி வைச்சாருங்க எல்லா ஊருலயும்...அதுல 250 chair அ போட்டு இவரு உடைச்சுட்டாருன்னு .. அவரு மேல வழக்கு ...... எப்படி இருக்கு

"விஜய்காந்த்" chair தூக்கி போட்டு கூட உடைக்க முடியும்...ஏன்னா அவரு captain..ஆனா இந்த case அ பாருங்க.. "சிவகாசி" படத்துல வக்கீல்களை தப்பா பேசின மாதிரி வசனம் வருதாம்..அதுக்காக "விஜய்" மேலயும் "அசின்" மேலயும் case போட்டு இருக்கார் ஒரு இளம் வக்கீல் மதுரை ல இருந்து.. ( அந்த தப்பான வசனம் பேசினது இவங்க இரண்டு பேரும்தான். )..

யோ...வக்கீல்...Director சொல்லி கொடுத்தத அப்படியே பேசராங்க யா அவங்க...ஒண்ணு case a Director மேல போடு, அல்லது வசனம் எழுதினவர் மேல போடு, ..அத விட்டுட்டு. நீ எல்லாம் படிச்சு வக்கீல் ஆகி...உருப்படும்..

ஆக வழக்குகள் பல விதம். ஓவ்வொன்றும் புதுவிதம்....

பி.கு. நாட்டு நடப்ப பத்தி நானும் ஒரு பதிவு போடணும்னு ரொம்ப நாள் ஆசை...இன்னிக்கு நிறைவேறுயது..."case by case" ன்னு ஆங்கிலத்துல இந்த பதிவுக்கு பேரு வைச்சு இருக்கேன்னு "அய்யா" என் மேல case போட்டுராதீங்க?

Wednesday, November 09, 2005

துள்ளித்திரிந்த பள்ளிக்காலம்..

ஒண்ணாம் வகுப்புல இருந்து 5 ஆம் வகுப்பு வரை நான் "C" செக்ஷன் தான். "விமலா" டீச்சர் மறக்கவே முடியாது. "பிள்ளங்களா..5 நிமிஷம் அமைதியா இருங்க" சொல்லிட்டு சாயங்காலம் தினமும் 4 மணிக்கு பேரயர் பண்ணுவாங்க. 5வது வகுப்பு வரை அவங்க தான் class டீச்சர்.. நல்லா அன்பா இருப்பாங்க..

டீச்சர்.. "Recess" ன்னு ஒரு கைய தூக்கிட்டு வெளியபோய் 5 நிமிஷம் ஓபி அடிச்சிட்டு வரதை அந்த தொன்று தொட்ட காலத்திலிருந்தே பழக்கத்தில் உள்ளதுன்னு நினைக்கிறேன். ( நிறைய தடவை headmisses கிட்ட ரொம்ப நேரம் பராக்கு பார்த்துக்கு "பின்னாடி" அடி வாங்கினதும் உண்டு.

எத்தன வருஷம் ஆனாலும் கூட படிச்சவங்க சில பேர மறக்கவே முடியாது... இப்பவும் செந்தில் ல பார்த்தா நினைவு வரும், "டேய் நீ தானே என்ன சேலேட்டால மண்டைய உடைச்சன்னு..".. சும்மா இல்ல நானும் பதிலுக்கு Tiffin box அ தூக்கி எறிஞ்சிட்டேன்.. ( பின்ன வீர பரம்பரையாச்சே ?? ) Tiffin Box ஓட விளிம்பு பட்டு சரியா கண்இமைல ஒரு கீரல் அவனுக்கு.. நல்ல வேளை கண்ணுக்கு வெளிய பட்டுச்சு..இல்லா..ஒரு கண்ணு நொள்ளயா ஆயிருக்கும்...

அப்பறம் BoysClassLeader தங்கராஜ்..வாட்ட சாட்டமா ஆள் கறுகறுன்னு இருப்பான். "எல..பேசாதல.. இல்லன்னா.board ல பேரு எழுதுருவேனு ஒரு வாட்டி சொன்னா போதும்.. அமைதியா இருக்கும் மொத்த class உம்..Girls Class Leader பானுமதி ..இவ பார்க்க நம்ம சித்தி ( நம்ம ராதிகா aunty தான் ) மாதிரியே இருப்பா.. எப்பவும் தங்கராஜும், பானுமதியும் பேசிக்கிட்டேதான் இருப்பாங்க... அவங்க பேரு மட்டும் இது வரைக்கும் Board க்கு வந்ததே இல்ல.. அப்பவே அரசியல்..

ஆ..சுவாரஸ்யமான character ஒண்ணு உண்டு. அது தான் நம்ம "அழகி" படத்துல வர மாதிரி ஒரு "தன லக்ஷ்மி" character. அவ பெரு "ஜெயந்தி"... அவங்க அப்பா தான் பள்ளிக்க்கூடத்த கட்டுனாரு...கொத்தனார் பொண்ணான்னு கேக்காதீங்க ? school Director பொண்ணுன்னு சொல்ல வந்தேன் ...ஆ..அப்ப உடனே அழகா இருப்பா, நம்ம பையனுக்கு அவ மேல ஒரு Loveன்னு கற்பனை எல்லாம் வேண்டாம்.. ஏன்னா அவ ஒரு குண்டு.... வெள வெளேர்ன்னு.... ஒரு வெள்ள பன்னிகுட்டி மாதிரி இருப்பா. அவ உஷா ( உஷாவோட அப்பா தான் செகரட்டரி ) கூட மட்டும் தான் பேசுவா..

அடுத்து சாப்பாடு... இப்பவும் அந்த பருப்போட ஒரு புளிச்ச "சத்துணவு வாசனை" வரும் பாருங்க...தூக்குது போங்க.. என் போறாத நேரம் அப்பத்தான் முட்டையும் சேத்து போட ஆரம்பிச்சாங்க school a) அந்த மணத்துல நம்ம சாப்பாடு கடைய ஆரம்பிப்போம்..இட்லி தோசைனா ஒரே குஷி தான்.( சப்பாத்தி கொண்டு வந்தது எனக்கு ஞாபகம் இல்லை )

தினசரி காலைல அம்மாகிட்ட மறக்காம கேக்கற கேள்வி இது தான். "அம்மா, இன்னிக்கு என்னமா Tiffinbox ல"ன்னு.. அம்மாவும் சலிக்காம இன்னிக்கு "சாம்பார் சாதம் வச்சு இருக்கேன்..ஒழுங்கு மரியாதையா எல்லாத்தயும் சாப்பிடு சொல்லிட்டேன்னு" ஒரு அதட்டு அதட்டுவாங்க..நம்மக்கு அழுகை அழுகையா வரும்..... அய்யயோ.. சாம்பார் பிடிக்காதுன்னு இல்ல. ( என்ன குடுத்தாலும் கொட்டிக்கறது நமக்கு அப்ப இருந்தே உண்டுங்க) . வழக்கமா சாப்பாடு நேரத்துல தான் "எரி பந்து" விளையாடுவோம்..சாம்பார் சாதம், தயிர் சாதம் னா சாப்பிட ரொம்ப நேரம் ஆகும்.. அதுக்கு தான்...

மதிய சாப்பாட்டுக்கு கடை அப்படின்னா, evening snacks ( Burger , சமோசா எல்லாம் நினைவு வந்தா நான் பருப்பு சாரி பொறுப்பு இல்லிங்க...) ஒரு தனி குஷி தான்.. அப்பா முந்தின நாள் Junction ( அதான்ங்க பக்கத்து பெரிய ஊரு. ) போய்ட்டு வந்துருந்தா போதும், கண்டிப்பா பூந்தி, லெஷ்மிவிலாஸ் அல்வா, அப்பறம் ஆந்தரா முறுக்கு கண்டிப்பா இருக்கும்......

"சுமிமாசென்.. "
"ஹை...." ...

Office la கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டாங்களே..இருங்க என்னன்னு கேட்டுட்டு வந்துரேன்....