என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Saturday, April 07, 2007

விஜய T.ராஜேந்தர் - in SunTV..

விஜய T.ராஜேந்தர் "SUNTV -அசத்தப் போவது யாரு?" .. நிகழ்ச்சியோட chief guest ஆ வந்தார். வந்தவங்களை பேச விடாம இந்த ஆளு பேசிக்கிட்டே போறாரு. சிட்டிபாபு "அம்மாவை பத்தியும் உங்களுக்கு தெரியும்ன்னு" சீண்ட, TR ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டாரு...

chief guest ஆ இருந்து வந்த வேலைய மட்டும் பார்த்தோமா..இல்லாயான்னு இல்லாம.. என்ன்மோ. ஓலைப்பாய்ல One bathroom மாதிரி.."திருமுகம்", "ஆறுமுகம்".."பலமுகம்" ன்னு அறுக்க எப்ப நிறுத்துவாருன்னு ஆயிருச்சு..... program நடக்கும் போதே..திடீருன்னு சிம்பு-மன்மதன், அழகு..ஆனா..நான் ஒரு வெண்ணை, அழுக்குமூஞ்சி, அசிங்கம்ன்னு சொல்லி அவர அப்படியே உயர்த்திக்கிட்டாரு..."திறமை தான் அழகு..முகம் இல்லை.ன்னு தத்துவம் வேற..

ஒரு விஷயம் கண்டிப்பா SunTV கிட்ட கேட்டே ஆகணும். "TR அ நிறைய நேரத்தில ஒரு Side Angle ல காட்டறீங்களே? ஏன்?...அப்ப தான் அவரு தொந்தி ஒரு பெரியா பானை மாதிரி தெரியுதே..அதுக்காகவா? Chief Guest ஆ கூட்டிட்டு வந்து கவுத்துங்க!!..என்னமோ அசத்துங்க.."

பேசினா திக்குவாயா வரும்ன்னு பாடிக்காட்டி "தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரன்"..ன்னு பேரு வாங்கின ஆரோக்கியராஜை..TR "அசத்தல் மன்னனா" தேர்வு செஞ்சாரு...அவர நல்லா ஊக்கம் வர வார்த்தைகளால் பேசினாரு.. கடைசில..உணர்ச்சிவசப்பட்டு... ஒரே அழுவாச்சி..தன்னோட சொந்த வாழ்க்கைய பத்தி பேச ஆரம்பிச்சுட்டாரு... அப்ப மதன்பாப், சிட்டிபாபுவ பார்த்து.."நான், சொன்னேன்..இந்த ஆளு வேண்டாம்ன்னு..இப்ப..பாரு.இது தேவையா?" ன்னு சொல்லற மாதிரி ஒரு Look விட்டாரு"..பாருங்க..அப்படியே அப்பட்டமா தெரிஞ்சுது..இப்படி எல்லாம் Program நடத்தறவங்க பண்ணாம இருந்தா கொஞ்சம்..நல்லா இருக்கும்.

TR கடைசில..Dance அ போட்டு..ஒரு பாட்டயும் பாடி...என்னமோ அசத்திட்டுபோய்ட்டாரு.. TR மாதிரி ஆளூங்க.."அழகு.முஞ்சியில இல்ல. .திறமையில இருக்குன்னு சொல்லிட்டு போறாங்க..நல்லா தான் இருக்கு.. ஆன..இவரு பண்ணற நம்ம பார்க்க நமக்கு தான் நிறைய பொறுமை வேணும்..

1 Comments:

Blogger Krish R said...

அன்புள்ள பிரகாஷ்....

உங்களோட வலைப்பதிவ படிக்கப்போறேன்ன ஆரம்பத்துலயே... நக்கலும், நகைச்சுவையும் பஞ்சம் இல்லாத ஒரு சுவாரஸ்யமான வலைப்பக்கமா தான் இருக்குமுன்னு நல்லாவே தெரியும்.... அந்த நம்பிக்கை ஒரு சதவீதம் கூட வீண் போகலங்க...

ஒவ்வொரு விஷயத்தையும் நீங்க அனுகும் விதத்துல இருக்கற நகைச்சுவை அடுத்த பக்கத்துக்கு ச்ர்ர்ர்ர்ர்ருனு ஸ்க்ரோல் பண்ணி ஓடிப்போகாம ஒவ்வொரு வார்த்த்தையையும் ரசிச்சு ரசிச்சு படிக்க வைக்குது... சூப்பருங்க.... உங்களோட சினிமா பார்வையை ஏற்கனவே நாங்க எஸ்.ஓ.டி ல பாத்திருக்கோம்... மத்த விஷயங்கள்ல உங்க ரசனையையும், இப்போ தெரிஞ்சுக்க முடிஞ்சுது....

எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுங்க..அதான்... உடனே பதில் போட்டுட்டேன்...

இன்னும் நிறைய எழுதுங்க.... வாழ்த்துக்கள்...

பிரியங்களுடன்...

எழுத்தைக் கூட எட்ட நின்றே வேடிக்கை பார்க்கும்...

ஏகலைவன்....

10:41 PM  

Post a Comment

<< Home