என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Wednesday, September 14, 2011

இன்றும் தொடர்கிறதா ?

இன்றும் தொடர்கிறதா ?

* வருடா வருடம் நடக்கும் செல்வி அம்மன் கோவில் கொடை இன்னும் நடக்கிறதா ? முக்கியமா கரகாட்டம் ஆடப்படுகிறதா?
* இன்றும் காலனி கிரிக்கெட் கிரௌண்டில் இளசுகளின் சாயங்கால அரட்டை தொடர்கிறதா ?
* பஸ்ஸில் பின்னாடி இடம் இருந்தும் காலேஜ் பசங்க இன்னும் " முன்னாடி " தான் தொங்கி செல்கிறார்களா ?
* "ரயில்வே கேட் " இன் அடிப்பக்கம் வழியாக சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஐ சரித்து கடந்து செல்லும் இன்னும் மக்கள் உள்ளார்களா ?
* இன்றும் நண்பர்களை "மக்கா " என்று கூப்பிடும் பழக்கம் உள்ளதா ?
* 9B பஸ் stop இன்றும் அதே பேரில் தான் அழைக்கபடுகிறதா ?
* "தாழையுத்தா ? கிளம்பும் போது ஏறிக்க " என்று ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்இல் சொல்லும் மதுரை பஸ் கண்டக்டர்கள் என்றும் உள்ளனரா ?
* ஒரு செமஸ்டர்ல இருக்கற 5 பாடங்களையும் ஒரே நோட்டில் 5 dimensional ஆக எழுதும் என்னை போன்ற அறிவுஜீவிகள் இன்னும் இருக்கிறார்களா ?
* பஸ்சில் ஓடி வந்து ஏறி தொங்கிக்கொண்டு டிபன் பாக்ஸ்சையும் நோட்டையும் "ஜன்னல் பிகர் " இடம் கொடுத்து வைக்கும் காட்சிகள் இன்னும் அரங்கேறுகிறதா ?
* நெல்லை கிரிக்கெட் league தொடர்ந்து நடக்கிறதா ? யாரு கடந்த வருட வின்னர்ஸ் ?
* கிரிக்கெட் League இல் அம்பயரிங் சம்பளம் கூட்டபட்டு உள்ளதா? இல்லை அதே சம்பளம் தானா ?
* "25 ரன் அல்லது 3 விக்கெட்" என்ற பேப்பர் ஸ்கோர்களின் விதி மாறி இருக்கிறதா ?
* இன்றும் பழக்கடைகளில் பன்னீர் சோடா விற்கப்படுகிறதா ?
* பிளாட்பாரம் இட்லி கடை, பரோட்டா கடை போன்றவைகளுக்கு இன்றும் கிராக்கி உள்ளதா ?
* பள்ளிகூட மாணவிகள் இடது புறமாகவும் மாணவர்கள் வலது புறமாகவும் நடந்து சங்கர் ஸ்கூல்க்கு செல்வது நடைமுறையில் உள்ளதா ?

0 Comments:

Post a Comment

<< Home