என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Sunday, November 27, 2005

நினைவுகள்.

நண்பனே..

காலங்கள் உருண்டோடியது..
தன் இலைகளை அவிழ்த்துக்கொண்ட
மரங்களுக்கும் குளுரியது.

வேலைகள் கழுத்தை நெரித்தன..
இதற்கு இடைவெளியாய்..திருமணம்.
ஒரு தேவதையாய்..
அழகே உருவான ஒரு தங்கத்தாமரை..
என் உயிருக்குள்...

கவலைகள் மறந்தன..மலைகளும் சிறுகடுகானது.
சுமையான வேலைகள்..சுலபமானது..

ஆயிரம் இருந்தும்..
நண்பனே..
பட்டாம்பூச்சியாய்
நாம் இருந்த காலங்களை
அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home