என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Thursday, March 10, 2005

ஆளு இல்லாத கடைக்கு

ஆளு இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்தற ? அப்படித்தான் இருக்கு என்னோட கடை.

துறந்து வைச்சு ஈ மொய்க்குது . டீ கடைல ஒரேஒரு டீ ய வச்சுகிட்டு ஒரு மணிநேரம் பேப்பர் படிக்கற மாதிரிகூட இங்க யாரும் இல்ல.
சலூன் கடையில முடி வெட்டிக்க போறேமோ இல்லயோ, நல்ல தலைய வாரிட்டு திரும்பி வந்துருவோம்..அங்க கூட கடைக்காரன்க்கு தெரியும் யாரு வந்தாங்க்ன்னு.. இந்த கடைல அதுவும் இல்ல..

ஒரு வேளை சரக்கே இல்லயோ அல்லது சரக்கு மாஸ்டர் சரி இல்லயோ ?? சரி, இப்ப தானே கடை ஆரம்பிச்சு இருக்கோம்....
pickup பண்ணீக்கலாம்....


சரி புலம்பறத விட்டுட்டு வந்த விஷயத்த சொல்லறேன்...

ஒரு வருஷம் கழிச்சு இந்தியா போறேன்... இந்தியா ல போய் வலைப்பதிய முடியுமான்னு தெரியல.. அதனால ஒரு 2 வாரத்துக்கு விடுமுறை விட போறேன் இந்த வலைப்பதிவுக்கு...
கண்டிப்பா இந்தியால இருந்து வந்ததுக்கு அப்பறம் நிறைய matter இருக்கும்னு தோணுது...

அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது..

கடை நிறுவனர்..
பிரகாஷ்

1 Comments:

Blogger தெருத்தொண்டன் said...

என்னது ஸார் , இந்தியாவுக்குப் போய் வலைபதிக்க முடியாதா? ஏன்?

11:24 AM  

Post a Comment

<< Home