என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Sunday, February 13, 2005

RainCoat

Bengali Director "Rituparno Ghosh" ரின் முதல் ஹிந்தி படம். Neeru ( Aishwariya ) வையும் Manoj ( AjayDevgan ) இருவருக்கும் நடக்கும் பேச்சுவார்த்தையே இந்த "Raincoat". ஐந்து பேரை வைத்து குழப்பாமல் , குதறாமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் Director.


"குடைக்குள் மழை" போன்ற முயற்சி தான் இந்த "Raincoat" உம். ஆனால் "Raincoat" வெற்றிபெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். Director படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால்,சில நேரங்களில் மந்தமாக இருப்பதை சரி செய்து இருக்கலாம். Camera கண்கள் நம்மை அதிகமாக கற்பனை செய்ய வைத்தது நூற்றுக்கு நூறு உண்மை. "AjayDevgan - Depressed" ஆளாக வந்து நம்மையும் சோகத்தில் இறக்கி இருக்கிறார். ஐஸ்வர்யாவின் கண்கள் அதிகம் பேசுகின்றன.

"AjayDevgan" னின் நண்பனின் மனைவி "AnnuKappor" குறைந்த நிமிடமே வந்தாலும் திருப்தியா செய்து இருக்கிறார். "BathRoom" லில் அழும்பொழுது இனிமேல் Shower ஐ திறந்து விட்டு அழுங்கள். " போன்ற வசனங்கள் ரசிக்க வைத்தன.. "Ajaydevgan" க்கும் "Annu Kappor" க்கும் நடந்த உரையாடல் திரைக்கு பின்னால் வருவது போல் எடுத்தது மிகவும் சிற்ப்பு...

"AjayDevgan" , "Ishwariya" வின் உரையாடலில் நீளம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் சில உரையாடல்கள் சுவாரசியமாகவும் இருக்கின்றன... உதாரணம். Ishwariya Abroad போகாததற்கு சொல்லப்படும் பொய் காரணங்கள், சமைக்காதற்கு சொல்லப்படும் காரணங்கள்.

"HouseOwner" தன்னை அறிமுகப்படுத்தப்படும் காட்சிகள் மிக யதார்த்தம். AjayDevgan வோடு சேர்ந்து நம்மையும் "HouseOwner" ஐ சந்தேகப்பட வைத்தது அருமை..

ஒரு இரவல் "Raincoat" உண்மையை உணர்த்துவதால் இந்த பெயர்க்காரணம்.
குடையை ( குடைக்குள் மழை யை ) விட "Raincoat" அழகானது...

மொத்தத்தில் "Raincoat" கொஞ்சம் நீட்ட பட்ட கவிதை..

0 Comments:

Post a Comment

<< Home