என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Thursday, February 10, 2005

மறக்க முயற்சி செய்கிறேன்.. முடியவில்லை

இன்று உன் வலி அதிகமாக இருக்கிற்து அகல்யா. என்னவோ தெரிய்வில்லை... உன் Photo வை மறுபடியும் பார்க்கிறேன். காலங்கள் ஓடினாலும் "எந்தா சுகம்தன்னே..." என்று நீ கேட்டு விட்டு போகிறாய் கனவிலும் காற்றிலும். "அகல்யா... நீ எங்கே இருக்கறாய்... இந்த கடிதம் உன்னை சென்று அடையுமா ??"

"எப்ப கல்யாணம்..?" என்றாள் யாமினி... ஒரே வாரத்தில் இத்தனை மாற்றமா ? உன்னோட Classmate Biju ஒரு ஓட்ட தமிழ்ல சொல்லறான். " இரண்டு பேரு மாத்திரம் photo எடுக்கட்டே.." நீ வெக்க பட்டு சிரிக்க .அப்படியே ஒரு Click.. நினைவு இருக்கிறதா "அகல்யா.." அதே photo தான் இது.

Msc First year Professor "Antony Raj " சொல்லராரு. "National Integration Camp" ன்னு ஒண்ணு இருக்கு பா. South India ல இருந்து நிறைய College participate பண்ணுவாங்க. ஒரு வாரம் program .National Integration Classes, Social Welfare schemes,அப்பறம் Cultural Programs கூட உண்டு.. Get Ready Ok ?" என்றார். உன்னை பார்க்க போகிறேன் என்று தெரியாமலே என்னை நான் தயார் படுத்திகொண்டு இருந்தேன்..

அந்த் வருஷம் "Shimoga University" , Karnataka வில் ( JOG Falls பக்கம் ) தான் Camp. ஊர விட்டு ஒதுக்கி வைச்ச மாதிரி அந்த

"Gigantic University Campus". சுற்றி பச்ச பசேல்ன்னு இருந்தது அந்த இடம். 150 பேரு இருப்போம் அந்த Campkku. தமிழ்நாடு ல இருந்து Loyolaa college அப்பற்ம் எஙக College. கேரளா ல இருந்து 4 college ஆனால் Majority Karnataka தான்.

உன்னை நான் இரண்டாவது நாள் தான் பார்த்தேன். ஒரு Room இன் வாசலிலில் நான் நின்று கொண்டு இருந்டதேன். ""Excuse me". என்றதது ஒரு குயில். திரும்பினேன். எனக்கு பிடித்த Sky Blue saree யில் நீ உன் கண்கள் என்னை பார்த்து இமைத்தது. நான் அந்த நிமிடம் இமைக்க மறந்து போனேன். "Excuse me" என்றதது அதே athee குயில். ...உன் வழியை மறைத்து கொண்டு இருந்த நான் பேசாமல் ஒதுங்கி போனேன். நீ திரும்பி பார்த்துகொண்டே என் கண்களில் இருந்து மறைகிறாய்.

நம் கண்கள் தான் அதற்கு பின்னர் அதிகமாக பேசி கொண்டன. நாம் அந்த 2 நாளீல் மிகவும் நெருங்கி இருந்தோம். எப்படி வந்தது இந்த நெருக்கம். அகல்யா.. ?"

"4th day, உனக்கு உடம்பு சரி இல்லாமல் போனது. Organizer இடம் பேசி விட்டு நானும் யாமினியும் உன்னை கூட்டி கொண்டு Hospital போகிறோம்.

Jeep ல் போகும் பொழுது நீ மயக்கம் அடைந்து என் தோள் மேல் சரிகிறாய். என் கண்கள் அன்று பசிபிக் கடல் ஆனது.
Doctor எழுதிகொடுத்த Tablets வாங்க ஓடினேன் .. ஞாபகம் இருக்கிறதா அகல்யா ? ( இன்றும் அந்த Medical Prescription என்னிடம் பத்திரமாக இருக்கிற்து அகல்யா )

"National Integration" Theme ல் ஒரு SKIT போட்டு 1st prize வாங்கியதில் "Hero image" வாங்கி இருந்தேன். எங்க College அ

"Special performance" பண்ண சொன்னாங்க. ஒரே நாளீல் புது Drama தயார்ஆகி இருந்தது. "3 minutes" கழித்து தான் என்னோட

"Introduction" அந்த Draama வில் அது வரைக்கும் "Audience கூட audience ஆ " நான் கலந்து இருப்பேன்.
"Drama" ஆரம்பிச்சு 2 நிமிஷம் ஆகி விட்டது. அப்பொழுது கூட எந்த Tension உம் இல்லாமல் இருந்தேனே. "எப்படி அகல்யா. .நீ என் பக்கத்தில் இருந்ததாலா ? உன் கை என்னை பிடித்து கொண்டிருந்ததாலா ?"

நாம் பிரிந்து செல்லும் நாள் வந்தது. "Group Photo" விற்கு நீ அன்று SareeyiL தேவதை போல் இருந்தாய். உன்கிட்ட அத சொல்ல வேண்டும் என்று எனக்கும் தோணவில்லை. தேவையும் படவில்லை. Address பரிமாறி கொண்டோம் அடுத்த வாரம் கண்டிப்பாக Tiruvandrum வருவேன் என்று உன் தலையில் சத்தியம் செய்தேன். கண்ணீரோடு நாம் கண்கள் பிரிந்து கொண்டன..

அதன் பின்னர் கிட்டதிட்ட 2 வருடங்கள் கேரளாவில் நாம் சந்திக்காத இடம் இல்லை. கோவளம், ஆலப்புழா Bback water,

பத்பநாபன் கோவில், திருவனந்தபுரம் Zoo.. இப்படி நிறைய இடங்கள்.. இந்த கால கட்டத்தில தான் College Fees அதிகமாகி இருந்தது.

Postman நெருங்கிய நண்பனாகி இருந்தான்.

திடீரென்று ஒரு நாள் , "Post" என்றது புதிய PostMan குரல்.
Postmaan கூட அன்று மாறி இருந்தான். ..கடிதம் உன்னிடம் இருந்து தான். நனைந்து போல் இருந்தது கடிதம். படிக்க ஆரம்பித்தேன்.

Dear
This is my last letter..( I am crying now). Please Dont reply for this Letter. Please Dont ask for any Reasons too. I am not in a

Position to explain. Understand my situation.. I am very Sorry.. ..BYE for EVER...
By AgaLyaa..

என் Suitcase குள் Post செய்ய பட்ட என்னுடைய பதில் கடிதம் இதோ.

என் உயிர் அகல்யா..
நீயே என்னை காயப்படுத்தாத போது நீ என்னை பிரிந்த காரணங்களா காயப்படுத்த போகிறது..

பின் குறிப்பு.
உடனே புறப்பட்டு Trivandram சென்றேன். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. காரணகம் செய்தியாய் வந்தது. .......
மன்னித்து விடுங்கள்.
காரணத்தை இப்படி கதை எழுதி கண்ணீர் விட என மனது கேக்க வில்லை.. இருந்தாலும் இந்த கதையிலேயே அதை ஒரு இடத்தில்
சொல்லி விட்ட சமாதானத்தில இன்று மட்டும் "தூக்கமாத்திரை" இல்லாமல் தூங்க முயற்சிக்கிறேன்.

"மறக்க முயற்ச்சிறேன்.. முடியாமல் போனால் அதற்கு நான் மட்டுமே குற்றவாளி. "

0 Comments:

Post a Comment

<< Home